செம்பட்டி,ஜுலை.18-
கம்ப்ïட்டரில் இருந்து செல்போனுக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறையை செம்பட்டி வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒரு லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில்லோகா கம்யூனி கேசன் உரிமையாளர் நா.மகேஸ் வரன், எம்.ஏ., பட்டதாரியான இவர் செம்பட்டியில் எஸ்.டி.டி. பூத் மற்றும் டிïசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டரிலிருந்து செல்போனுக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதியமுறையே கண்டுபிடித்துள்ளார். பெரும்பாலும் ஒருவருகëகு தகவல் அனுப்ப வேண்டு மென்றால், ஒருவர் செல்லிலிருந்து தகவலை டைப் செய்து மற்றொருவர் செல்லுகëகு அனுப்பலாம். ஆனால் ஒரு தகவலை ஒரே தடவையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அனுப்ப முடியாது. இந்த தகவல் அனுப்பும் முறை செல் டூ செல் மட்டும் அனுப்ப முடியும். ஆனால் கம்ப்ïட்டரிலிருந்து முதல் முறையாக செல் போனுகëகு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு தகவல் அனுப்பும் முறையை கண்டுபிடித்துள்ள செம்பட்டி வாலிபர் மகேஸ்வரனை சந்தித்த போது அவர் கூறியதாவது:-
கம்ப்ïட்டரில் பதிவு
இண்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு ஐடி ஓப்பன் செய்து அதில் நாம் யார் யாருகëகு தகவல் அனுப்புகின்றோமே அவர்களின் செல் நம்பர்களை (ஒரு லட்சம் பேர் வரை அல்லது அதற்க்கு மேலும் கூட) கம்ப்ïட்டரில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் என்ன தகவல் அனுப்புகிறோமோ அந்த விவரங்களை டைப் செய்து ஓகே கொடுத்தவுடன் அனைத்து நபர்களுக்கும் ஒரே நேரத்தில் சென்றடைந்து விடும். இந்த முறையை கல்லூரிகள், பெரிய கம்பெனிகள், தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில்
உதாரணமாக கல்லூரியில் படிகëகும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களின் செல் நம்பர்களை நிர்வாகம் வாங்கி வைத்து கொண்டு கல்லூரி விடும் நேரம், விடுமுறை மற்றும் முக்கிய தகவல்களை ஒரே நேரத்தில் அவர்களுக்கு அனுப்பலாம்.
இதன் மூலம் மாணவர்கள் பெற்றோர்களை ஏமாற்ற முடியாது. 5 நிமிடத்தில் தெரிவிக்கிற தகவலை லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் தெரிவிக்கலாம். எனது கண்டு பிடிப்பை மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு செய்து காண்பிக்க உள்ளேன்.
இவ்வாறு மகேஸ்வரன் கூறினார்.