பெர்காம்பூர், ஜூன் 16: ஒரிசாவில் முதல் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து 2வது குழந்தை பிறந்துள்ளது.
ஒரிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம் கேந்துபாதர் பகுதியை சேர்ந்தவர் தபலேஷ்வர் பத்ரா. இவரது மனைவி பபினா பத்ரா(25).கர்ப்பம் அடைந்த பபினாவுக்கு ஸ்கேன் சோதனை செய்து டாக்டர்கள் பார்த்த போது, அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 1.3கி எடை இருந்தது. சாதாரணமாக இரட்டை குழந்தை என்றால், அதிகபட்சமாக 1 மணி நேர இடைவெளியில் பிறந்துவிடும். ஆனால், பபினாவின் வயிற்றில் இருந்த மற்றொரு குழந்தை, முழுமையாக வளர்ச்சியடையவில்லை.
இதனால், அந்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது ஒரு மாதமாகும் என்று டாக்டர்கள் அறிந்தனர். இதையடுத்து, மருத்துவமனையிலேயே பபினாவை தங்க வைத்து சிகிச்சையளித்தனர். சரியாக முதல் குழந்தை பிறந்து40 நாட்கள் கழித்து பபினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2கி எடை இருந்தது.
இது பற்றி பபினாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் மொகந்தி கூறுகையில்,Ôஇரட்டை குழந்தைகள் இரு வகை உண்டு., மருத்துவ அறிவியலில் இதற்கு Ôயூனி ஓவுவர்Õ, Ôபை ஓவுலர்Õ என்று பெயர். பை ஓவுலர் பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் என்றால், ஒன்று அல்லது 2 நாள் வித்தியாசத்தில் பிறக்க வாய்ப்புள்ளது.
எனினும் 40 நாள் என்பது மிகவும் அதிகம்தான். ஆனால், பை ஓவுலர் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்Õ என்றார். பபினாவின் இரண்டு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்தார்.
நன்றி தினகரன்